மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் நினைவு நிகழ்வு

பெருந் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 18 வருடங்களாகும்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவினை நினைவுபடுத்தும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2018.09.16 ம் திகதி அவர் இறையடி சேர்ந்த தினமான அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 06.00 மணியளவில் கொழும்பு பெளத்தாலோக மாவத்தை மஸ்ஜிதின் நூர் பள்ளிவாசலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலியின் தலைமையில், தவிசாளர் பஸீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார், மிப்தார் மௌலவி மற்றும் பல பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

எனவே சகலரையும் தவறாது கலந்து சிறப்பிக்க வருமாறு செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலி அன்புடன் அழைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *