ராஜாங்கனய் பிரதேச செயலாளர் பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!
அநுராதபுரம் – ராஜாங்கனய் பிரதேச செயலாளர் பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத் தொடர்பு காரணமாக ராஜாங்கனய் பகுதியில் கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டு வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலக பிரிவுக்கான புதிய தபால் மூல வாக்களிப்பு திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.