கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்றதால் பதற்றம்!

தெலங்கானாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், நடந்தது என்ன என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக அவரது உடல் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் என். ராவ், உயிரிழந்தவரின் உறவினர் மருத்துவமனை ஊழியர் என்றும், அவர் உடலை தரும்படி கேட்டபோது, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அதற்கு அவர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டதாகவும், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் டீன் ராவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *