கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,44,222 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,98,129 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,335,318 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,184 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 113,233 பேர் குணமடைந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *