பொதுத்தேர்தல் திகதி குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (29) இடம்பெற்றது.

இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (01) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *