மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை வெளியீடு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

குறித்த சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *