சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்குள் உட்புகுவதற்கு தடை

அரேபிய குடிக்கள் ஜித்தா நகருக்குள் உட்புகுவதை விட்டும் இன்று முதல் தடுக்கப்பட்டுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் படி ஜித்தா நகருக்குள் இருந்து யாரும் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவோ முடியாது வகையில் மூடப்பட்டுள்ளதாக (Lockdown)  தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ரைவஸ் தாக்கம் சவூதியில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 3.00 மணிமுதல் ஜித்தா நகரில் அமூலில் இருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக றியாத், மக்கா, மற்றும் மதீனா நகரங்கள் கடந்த வியாழக் கிழமை மூடப்பட்ட நிலையில் தற்போது ஜித்தா நகரையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் நேற்று வரை 1203 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *