நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்?

நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறைந்த பட்சம் பொதுத் தேர்தல் 3 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்பு மனு தாக்கலின் பின்னர் அந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரால் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

மீள தேர்தல் இடம்பெறும் தினத்தை பின்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *