ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மக்கள் நிராகரித்துவிட்டனர்

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தை மக்கள் நிராகரித்து விட்டனர்! சரத் பொன்சேகா
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சினை ஒன்று இருக்கின்றது.
அந்த கட்சியின் தலைவர் தனிமையான பயணத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியின் சின்னம் தொலைபேசி எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *