செல்போன்களால் கண்கள் பாதிப்பது அதிகரிப்பு
செல்போன்களால் கண்கள் பாதிப்பது அதிகரிப்பு!
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் சமீப காலமாகப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பார்வைக் குறைபாடு அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
காரணம், அவர்கள் பயன்படுத்தும் செல்போன்கள் தான் என்று சொல்லும் மருத்துவர்கள், இதனால் அவர்களுடைய பார்வை மட்டுமல்ல மனநலமும் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.
எதிலும் கவனம் செலுத்த முடியாத கவனக்குறைவும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தொலைவில் வைத்துச் செல்போன்களைப் பயன்படுத்தினால் அதன் பாதிப்புகள் அதிகமாவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆய்வை விட, பட்ட அனுபவம் தான் தற்போது அதிகமாக உணர்த்திச் சொல்லிக் கொடுக்கிறது.