வயசானாலும் அழகையும் இளமையும் தக்க வைத்துக் கொள்ளும் நீலாம்பரி

கடந்த 1983ஆம் ஆண்டு ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் உருவான வெள்ளை மனசு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். அப்போது அவருக்கு 14 வயது. இதன் பின்னர் படிபடியாக தெலுங்கு திரையுலகில் வளர தொடங்கினார். ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்

ஆட்டமா? தேரோட்டமா? பாடலுக்கு மன்சூர் அலிகானின் துப்பாக்கி முனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கவனிக்க வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதே இளமையையும், அழகையையும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் கூட தக்கவைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்!

ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி, ராஜமாதா என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இவர். படையப்பாவில் நீலாம்பரியாக வெகுவாக ஈர்த்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு ரம்யா கிருஷ்ணன் பாகுபலியால் பரவலாக கவனிக்கப்பட்டார். 14 வயதிலேயே வெள்ளை மனசு என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், பரதம், குச்சிப்புடி படித்துவிட்டு திரையுலகுக்கு வந்தவர். இரண்டாவது படமே தெலுங்கில் நடித்தவர் கன்னடம், மலையாளம், இந்தி போன்ற திரையுலகிலும் கால்பதித்தவர்.

சின்னத்திரையில் இவர் நடத்திய தங்கவேட்டை என்னும் ஷோ சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது. படையப்பாவில் இவரது வில்லத்தனம் வெகுவாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பே 50 வயதைக் கடந்துவிட்டார். அண்மையில் ஒருவிருது வழங்கும் விழாவுக்கு வந்தார் ரம்யா கிருஷ்ணன். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனைப் பார்த்த ரசிகர்கள் படையப்பா படத்தில் ரம்யா கிஉஷ்ணன், ரஜினியை பார்த்து வயசானாலும் உன் இளமையும், அழகும் உன்னைவிட்டு போகலைன்னு சொல்லும் அதே டயலாக்கை சொல்லி ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *