காலிமுகத்திடல் மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம்! – சஜித்தின் வெற்றி நிச்சயம் என்கிறார் அமைச்சர் மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று கூடிய மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இதனூடாக சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொலைகார ராஜபக்ச கும்பலுக்குப் பாடம் புகட்டி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கவே இந்த மக்கள் வெள்ளம் திரண்டது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *