கொள்கையை ஏற்கும் சு.க. சின்னத்தை மறுப்பது ஏன்? – மொட்டின் உறுப்பினர் சுசில் கேள்வி

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கையையும், ஜனாதிபதி வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஏன் ‘மொட்டு’ச் சின்னத்தை ஏற்க முடியாது?”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்குத் தற்போது கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினரே பொறுப்புக்கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான நிலையில் இருந்தது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சவால் விடுக்கும் பிரதான கட்சியாக இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எழுச்சி பெறும் அளசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *