மைத்திரி – மஹிந்த மூடிய அறைக்குள் நீண்ட நேரம் பேச்சு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் நேற்றிரவு நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மூடிய அறைக்குள் நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நேற்றுக் காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணியமைத்தலுக்கான பேச்சில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவது – எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.