எங்கள் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு! – கோட்டா வாக்குறுதி
“வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிடைக்கும்.”
– இவ்வாறு வாக்குறுதியளித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கையின் இறையாண்மையில் கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார். ஆனால், ஒருபோதும் அடிபணியமாட்டோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.