மும்பையில் ரயில் விபத்துகளில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!

மும்பையில் ஒரே நாளில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 16 பேர் பலியாகினர் எனக் கூறப்படுகின்றது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் ரயிலில், தினமும் 80 இலட்சம் பேர் பயணிக்கின்றனர். இதில், 8 முதல் 9 பேர் வரை, தினமும், ரயில் சார்ந்த விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும், மும்பை புறநகர் ரயில் தடத்தில் நடந்த பல்வேறு விபத்துக்களில், 16 பேர் பலியாகினர்.

ஒரு நாளில்இடம்பெற்ற ரயில் விபத்துக்களில், இறந்தவர்களின் எண்ணிக்கையில், இதுவே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *