ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினார்கள் எனக் கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏழு நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் முன் நேற்று இவை ஆராயப்பட்டபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *