வன்முறைகள் தலைவிரித்தாட சீனா பயணமானார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனா நோக்கிப் பயணமாகியுள்ளார்.
இன்று காலை 7.35 மணியளவில் யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் அவர் சீனா பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதியுடன் 27 பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இன ரீதியிலான வன்முறைகள் தலைவிரித்தாடுகின்ற நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் சீனா பயணமாகியமைக்கு அரசியல் மட்டத்தில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.