புதைக்கப்பட்டன சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!!

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதில் கடந்த 26ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு மோதல் மற்றும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிதும் சடலங்கள் பொலிஸாரின் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (02) புதைக்கப்பட்டன.

6 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரின் சடலங்கள் மத சடங்குகளின்றி புதைக்கப்பட்டன. சிறுவர்கள் அறுவரின் சடலங்களும் மதச் சடங்குகளுடன் புதைக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மதகுருவொருவரின் ஏற்பாட்டின் கீழ், அவருடைய கோரிக்கையின் பிரகாரம் மேற்படி சடலங்கள் புதைக்கப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *