நாடெங்கிலும் நாளை முதல் ‘புர்காவு’க்கு முற்றாகத் தடை!
தனக்குள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (29.04.2019) முதல் அமுலுக்கு வரும் வகையில் ‘புர்கா’ ஆடை உள்ளிட்ட முகத்தை மூடும் வகையிலும், அடையாளத்தை மறைக்கும் வகையிலும் எந்தவொரு ஆடைகளையும் அணியக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.