இயக்கச்சியில் படையினர் திடீர் சோதனை!

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் படையினர், இன்று (27) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்றக் காணிகள் என்பன படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதேவேளை, அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *