பிரதான கட்சிகள் மேதினக் கூட்டங்கள் இரத்து!
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் மேதின பேரணியும், கூட்டமும் கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் மேதினக் கூட்டங்களும், பேரணிகளும் இரத்துசெய்யப்பட்டுள்ளன.