இலங்கை கடல் எல்லையில் இந்தியப்படையினர் உஷார்!
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
இலங்கையில் நடந்த கொடூரமான தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. 300 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியது உள்ளூர் அமைப்பு என இலங்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.