தெமட்டகொடயிலும் சற்றுமுன் குண்டு வெடிப்பு! – 3 பொலிஸார் மரணம்
சற்றுமுன்னர், தெமட்டகொடயிலும் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொட – மஹாவில உத்யான வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடமொன்றிலேயே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் உயிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.