மங்களவுக்கு எதிராக வருகிறது பிரேரணை!

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தைக் காரணம் காட்டி இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்தன, திலங்க சுமதிபால ஆகியோர் இதில் கலந்துகொண்டனர் .

இதேவேளை, நிதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் நாடாளுமன்றம் கலையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *