ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளர்களை கணிக்கும் கரடிகள்!
உக்ரைனில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற போகும் வேட்பாளரை ரஷிய கரடிகள் கணிக்கும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக ரஷ்யா, ஸ்வீடன், தென் கொரியா போன்ற நாடுகளில் விலங்குகளின் கணிப்பை அதிகம் நம்புகின்றனர். தேர்தல், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் விலங்குகளை வைத்து வெற்றிவாய்ப்பை கணிக்கின்றனர்.
இறுதியாக அதிபர் பெட்ரோவின் கொடியினை எடுத்து போட்டு விட்டு, அந்த பழத்தை உண்டது. இதன்மூலம் பெட்ரோ மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதே பூங்காவில் மற்றொரு பெண் கரடியான அவ்ரோராவை வைத்தும், உக்ரைன் அதிபர் தேர்தல் தொடர்பாக கணிப்பு நடத்தப்பட்டது. இதில், செலன்ஸ்கியை அந்த கரடி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.