150 கிலோ கேரளாக் கஞ்சா தலைமன்னாரில் சிக்கியது!
மன்னார் – தலைமன்னார் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனக் கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டது.
ஐந்து மூடைகளிலிருந்து கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டது எனக் கடற்படை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.