ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு இம்மாத இறுதியில்!

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இது தொடர்பாக தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *