எதனைச் சாதிக்க முயல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? – சுரேஷ் கேள்விக்கணை
சர்வதேச கண்காணிப்பு எனக் கூறி ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முனைகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழர்கள் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டாலும், அது ஒவ்வொரு காலாண்டுக்கும் எதனை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட நேர சூசியைக் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.