வருட இறுதிக்குள் பொதுத்தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ்வருடத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

” நாடாளுமன்றமானது பலவீனமான முறையில் இயங்குகின்றது. எனவே, அதற்குரிய தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.

எனவே, இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெறலாம்.” என்றும் ஜனாதிபதி கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *