கோர விபத்தில் இளைஞர் பலி; 3 பேர் கவலைக்கிடம்!

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து நேற்று மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கிப் பயனித்த வேலையில் பூநகரிப் பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார், அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அதேநேரத்தில் பயணித்த மேலும் 3 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *