இந்தியாவைச் சீரழித்துவிட்டார் மோடி! – தி.மு.க. குற்றச்சாட்டு
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என்று தி.மு.கவின் மூத்த நிர்வாகி கம்பம் செல்வேந்திரன் கூறியுள்ளார்.
திமுக மூத்த நிர்வாகி கம்பம் செல்வேந்திரன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,
“தேர்தல் பதற்றமும், தோல்வி பயமும் பிரதமர் மோடியை இவ்வாறு பேச வைக்கின்றது.
மோடியை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
தவறான பொய்ப் பிரசாரங்கள் செய்து, 5 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துவிட்டார் பிரதமர் மோடி” – என்றார்.