ஜெயலலிதாவின் பள்ளித்தோழி சையத் காங்கிரஸில் சேர்ந்தார்!
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் பதர் சையத், காங்கிரஸில் சேர்ந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சையத்.
வழக்கறிஞர், எஸ்.ஐ.ரி.ஈ., மகளிர் கல்லூரியின் நிரந்தர உறுப்பினர், அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏ., வக்பு வாரிய தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை பதர் சையத் வகித்தவர்.
இவர், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸில் இன்று சேர்ந்துள்ளார்.