மனைவியின் பெண்ணுறுப்புக்குள் உலக்கையை புகுத்திய கணவன் – புஸல்லாவையில் கொடூரம்!
உடலுறவின்போது ஆணுறுப்பின் குறையை சுட்டிக்காட்டியதால் கடுப்பாகிய கணவன் மனைவியின் பெண்ணுறுப்பை சேதப்படுத்தி, கத்தியால் கைகளை வெட்டி, தலையில் தாக்கி கால்களை உடைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால், ஆபத்தான நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவர் புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துசெய்யப்பட்டு, எதிர் வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயாபான பிரதேசத்தில் இடம் பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இரவுவேளையில் குறித்த நபர் தனது மனைவியுடன் உடலுறவில் ஈடு பட்டிருந்த சந்தர்ப்பத்தில்
” உங்கள் ஆணுறுப்பு சிறியது. அதனால் எனக்கு பூரண திருப்தி கிடைப்பதில்லை.” என மனைவி கூறியுள்ளார்.
இதனால் கடுப்பாகிய கணவன், மனைவியை கம்பு ஒன்றினால் தலையில் தாக்கியும் கத்தியினால் கைகளை வெட்டி காயப்படுத்தி விட்டு கால்களையும் தாக்கிய சந்தர்ப்பத்தில் குறித்த பெண் மயக்க நிலையினையடைந்துள்ளார் .
பின்னர் சம்பல் இடிப்பதற்கு பயன் படுத்தும் கித்துள் மரத்தினாலான ஒன்றரை அடி நீளமுள்ள உலக்கையினை எடுத்து மேற்படி பெண்ணின் மர்ம உறுப்புக்குள் வைத்து பிரிதொரு கட்டையினால் அடித்து உட்செலுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது
இந் நிலையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த குறித்த பெண்ணை அவரது 16 வயது மகனே அயலவர்களின் உதவியுடன் கம்பளை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளான்.
அங்கு குறித்த பெண்ணுக்கு சுமார் ஐந்து மணித்தியாலயங்கள் வரை சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு வைத்தியர்கள் உலக்கையினை அகற்றியதாக தெரிய வருகிறது.
கம்பளை
ரா.சேகர