10 வருட அபிவிருத்தியை 10 மாதத்தில் செய்வோம்! – அமைச்சர் சஜித் சூளுரை

பத்து வருடங்களுக்குள் செய்யத் திட்டமிட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்வரும் பத்து மாதங்களுக்குள் செய்யவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்காலங்களில் வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறையைப் போல கலாசார விடயங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே தனது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *