கிளிநொச்சியில் ‘தேசத்தின் குரல்’ பாலசிங்கத்தின் நினைவேந்தல்!
தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு கிளிநொச்சி அறிவகத்தில் உணர்வெழுச்சியுடன் இன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.