பொதுத் தேர்தல் இன்றேல் மக்களுக்கு நீதி கிடையாது! – தீர்ப்பை அடுத்து நாமல் கருத்து
“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கின்றோம். அதன் விளக்கம் பற்றி நாங்கள் விவாதித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பைத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்துவோம். பொதுத் தேர்தல் இல்லாமல் நாட்டு மக்களுக்கு உண்மையான நீதி இல்லை.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு அரசமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றின் 7 நீதியரசர்கள் குழாம் ஏகமனதாகத் தீர்ப்பளித்த நிலையில் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.