தாயகத்தின் வீரமறவர்களை நினைவுகூர தயார் நிலையில் யாழ்.பல்கலைக்கழகம்! – உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது நினைவுத்தூபி
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று தமிழர் வாழும் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடம் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் சீரமைக்கப்பட்டுள்ளது.
தமிழரின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் நினைவிடத்தைச் சுற்றி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.