அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் அ.இ.ம.கா.எம்.பிக்கள் உம்ரா பயணம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர், உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக நேற்று மாலை மக்கா சென்றுள்ளனர்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான, கலாநிதி இஸ்மாயிலும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு பயணமாகவுள்ளார்.