நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்குக் கடிதம்! – நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுகின்றார்.
நாடாளுமன்றம் கூடுவது குறித்து அதில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளது.