ஆட்சி மாற்றத்தையடுத்து மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சி! ரணில், சம்பந்தனுடன் அவசர பேச்சு!!
இலங்கையில் நேற்றிரவு நடந்த அதிரடி ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இதையடுத்து கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் நேற்றிரவிலிருந்தே அவசர பேச்சு நடத்தி வருகின்றனர் என அறியமுடிகின்றது.