அரசுக்கு எதிராக சட்டி, முட்டியோடு வீதிக்கு இறங்கியது ஜே.வி.பி.!

எரிபொருள் விலைஉயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு உட்பட நல்லாட்சி அரசின் பொருளாதாரத் திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை ஜே.வி.பி. நடத்தவுள்ளது.


இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அக்கட்சி  தற்போது தெளிவுபடுத்திவருகின்றது. இதன் மற்றுமொரு நிகழ்வு இன்று மத்துகமவில் நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

வீதி, வீதியாகச்சென்று மக்களுக்கு கையேடுகளை விநியோகித்தனர். நடைபவணியாக சென்றவர்கள், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பை கண்டிக்கும் வகையில் சமையல் பாத்திரங்களுடன் வீதிக்கு இறங்கி – வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *